அடியேன்

Wednesday 11 March 2015

தாபம்

நள்ளிரவுப் பூனை 

அநேகமாய் நள்ளிரவு விழித்துக்கொண்டு 
அழும் அப்பூனை 
சில நாட்களில் 
அதிகாலையிலும்...
எடுத்து வளர்க்க ஆசை போலும் 
எதிர்வீட்டுக்காரனுக்கு.
என் கோபவிழிகளை
கண்ணுறப் பயந்து
ஒதுங்கிவிடுகிறான்.
மழைக்காலங்களில்
எந்நேரமும் விசும்பலொலி.
நீ இங்கிருக்கும் போது முனங்கக்கூட
செய்யாத அந்தப்பூனை
நீயில்லா பொழுதுகளில் அழுதே சோர்கிறது.
மாதத்தின் முந்தின வாரமும் அடுத்த வாரமும்
நிற்பதேயில்லை அழுகை.
சம்பாதித்தது போதும்.
நாடு திரும்பி வா.
பூனை பசியாறட்டும் ...