அடியேன்

Thursday, 23 August 2012

கிராமத் தேனிலவு (1)


கூந்தப்பனைபட்டி - பாகம் 1

.
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் இருந்து பதினோரு கிலோமீட்டர் தாண்டினால் பாப்பான்குளம்அடுத்த இரண்டு கிலோமீட்டரில் செல்லப்பிள்ளையார்குளம்அதற்கடுத்து ஊர் தான் கூந்தப்பனைபட்டிஊர் என்று கூட சொல்லமுடியாதுகிராமம்அதுவும் குக்கிராமம்நூறு நூற்றைம்பது வீடுகள் தான் இருக்கும்நான் பிறந்து எட்டு வயது வரை வளர்ந்தெல்லாம் அங்கே தான்அப்பா பார்த்து கொண்டிருந்த மதுராகோட்ஸ் கம்பெனி VRS கொடுத்து அவரை அனுப்பியதும் என்ன நினைத்தாரோசொத்துக்கள் எல்லாவற்றையும் விற்றுவிட்டு எங்களையும் சென்னை கூட்டி வந்துவிட்டார்சென்னையிலே பள்ளிப்படிப்பு முடித்து மெக்கானிக்கல் இன்ஜீனியரிங், கேம்பஸில் கிடைத்த கம்பெனி வேலை, டெல்லி டிரான்ஸ்பர் என முழு நகரவாசியாகவே மாறிவிட்டேன்அப்பா சென்னையை விட்டு வரவே இல்லைடெல்லி பேச்சிலர் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர இரண்டு மாதங்கள் முன்பு தான் சஞ்சனா இணைந்தாள்டெல்லி வாழ் தமிழ் குடும்பம்கிட்டத்தட்ட காதல் கல்யாணம் தான்வேலைக்குப் போன புதிதில் சக தமிழர் என்ற முறையில் அறிமுகம்ஆரம்பத்தில் ஆபீஸ் வேலைகளில் அவள் தான் எல்லா உதவியும் செய்தாள்நட்பு காதலாகிகல்யாணமாகியதுஅப்பா ஒன்றுமே சொல்லவில்லைஉன் இஷ்டம் என்று ஒதுங்கிக்கொண்டார்இப்போதும் சஞ்சனாவுக்கு தமிழ் சரியாக வாசிக்கத் தெரியாது.  ஆனால் சரளமாகப் பேசுவாள்

             திருமணம் முடிந்து இரண்டுமுறை தேனிலவு பிளான் கேன்சலாகிவிட்டது. ஒருவழியாய் நாற்பது நாட்கள் கழித்து கிளம்பிவிட்டோம். சென்னை வந்திருக்கும் போது அப்பா 'ஏண்டா நீ கிராமத்துக்கு போய் எவ்ளோ நாள் இருக்கும்' என்று சாதாரணமாக கேட்ட ஒரு கேள்வி தான் இப்போது கூந்தப்பனைபட்டி பயணக்காரணம். சஞ்சனாவுக்கும் கிராமம் பார்க்க ஆசை. படிப்பு, வேலை, அலைச்சல் என்று காலப்போக்கில் கூந்தப்பனைபட்டியை மறந்தே விட்டிருந்தேன். 20 வருடங்கள் கழித்து ஒரு பால்ய நண்பனைப் பார்க்கும் ஆவலோடு போய்க்கொண்டிருக்கிறேன். நெருங்க நெருங்க பல கலவையான நினைவுகள்... பாம்படம் தோளுரச சுற்றும் எச்சுமி பாட்டி .. தாமோதரன் சித்தப்பா .. விளையாடவும் வயல் போகவும் மாட்டுவண்டி .. பழையசோறு தொட்டுக்க சின்ன உள்ளி .. மிளகா .. ஒரே ஒரு லைப்ரேரியன், தூங்குமாரி .. இரவ, கமலை, நுங்கு வண்டி... இன்னும் என்னன்னவோ நினைவலைகள் மனக்கரையில் மோதின. ம்ம்ம்... அப்புறம் வாத்தியார் முருகேசு, முருகாயி அத்தை.

'முக்கூடல் 20 கி.மீ' என்ற போர்டு வண்டியை வலது பக்கமும், சஞ்சனாவின் கேள்வி நினைவுகளை நிகழ்காலத்திற்கும் திருப்பி விட்டது. 

"என்னிக்கு ரிட்டர்ன் செல்வம்?"

"இங்கே ஜஸ்ட் டூ டேஸ். போகும் போது அப்படியே கொடைக்கானல் போலாம்... 'll have our final touch there?'' கண் சிமிட்டினேன். 

"அய்யே வழியுது... தொடச்சிக்கோங்க" என்றாள் வெட்கச்சிரிப்போடு

வழியெங்கும் இருபக்கமும் வரிசையாக புளியமரங்கள். மாடு மேய்க்கும் சிறுவர்கள் மரத்திலும், மாடுகள் ரோட்டிலும் நின்றன. இரண்டு தடவை ஹார்ன் அடித்ததும் தான் உணர்வு வந்தவர்களாய் குதித்து "ஹேய் ஹேய்.." என்று பலங்கொண்ட மட்டும் கம்பால் அடித்து மாடுகளை ஓரம் விரட்டினர்.

"மாடு மேய்க்கிறத வுட்டுபிட்டு மரத்துல ஏறி மசுராடா புடுங்கிறீங்க??" என்றார் மர நிழலில் நுங்கு விற்கும் அந்த கிழவர். 

"வாட்ஸ் திஸ்??" ரோட்டோரம் இருந்த நுங்குகளைப் பார்த்துக் கேட்ட சஞ்சனாவிடம்

"இட்ஸ் கால்டு நுங்கு. பனைமரத்து காய். . ஐ மீன் பாம்ட்ரீ" என்று ஒருவழியாக புரிய வைத்தேன். 

"சாப்பிடலாமா" என்றாள்

வண்டிக்கும் சிறிது ஓய்வு வேண்டியதோ என்னவோ, அதுவாகவே இடது புறம் திரும்பியது. நிறுத்தி இறங்கினோம் 

"வெரி ஹாட் னா??" கேட்டபடி சன்கிளாஸ் அணிந்து கொண்டாள்

மாடு மேய்க்கும் சிறுவர்கள் "யாருலே இது!! தமன்னா கணக்கா இருக்கா. ஹிஹி!" என்றது என் காதில் கேட்டது. சஞ்சனா கிட்டத்தட்ட அவளைப்போலத்தான் இருப்பாள். என்ன, அவ்வளவு வெளேர் கிடையாது. திரும்பி அவர்களைப் பார்த்ததும் ஓடிவிட்டனர். "என்னவாம்" என்று பார்வையாலே கேட்ட சஞ்சனாவிடம் " நத்திங்" என்று சிரித்தேன். 

அதற்குள் "நல்ல இள நொங்கு மா ... வேனலுக்கு நல்லது" என்று சஞ்சனாவிடம் நுங்கு தாத்தா மார்கட்டிங் ஆரம்பித்திருந்தார். "எப்படி சீவி மட்டும் தரவா? கண்ணெடுத்து தரவா?" என்றதும் சஞ்சனா என்னை பார்த்தாள்.

"இல்ல சீவி மட்டும் குடுங்க" என்றேன். நுங்கை சீவி அப்படியே சாப்பிடும் சுகம் கண்ணாக  வெட்டி சாப்பிடுவதில் இருக்காது. ஒரு நுங்கை சீவி சஞ்சனா கையில் கொடுத்தார். 

"ஹேய் செல்வம்!! இதென்ன பார்க்கிறதுக்கு பவுலிங் பால் மாதிரியே இருக்கு...எப்படி சாப்பிடறது?? வித் ஸ்பூன்??'' பெரிதாகச் சிரித்தபடி நுங்கை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தாள். ஆம். சீவிய நுங்கு மூன்று கண்ணுடன் பார்ப்பதற்கு பவுலிங் பால் மாதிரியே தான் இருக்கும்.

"ஸீ ஹியர்" என்றபடி அவளுக்கு டெமோ காட்டினேன். "தம்ப் ஃபிங்கர் தான் ஸ்பூன். அத வச்சு தோண்டி இத மாதிரி சாப்பிடனும்" என்றேன். நுங்கை தோண்டியவுடன் பீரிட்டு அடிக்கும் நீரின் சுவையே அலாதி தான். "வெரி நைஸ்" என்றபடியே கொஞ்சம் கீழே கொட்டியபடி கூதுகலமாய் சாப்பிட்டு முடித்தாள். "அவுரேக்??" என்றதற்கு "எனஃப் எனஃப்" என்றாள். 

காசு கொடுத்துவிட்டு கிளம்பும் போது சஞ்சனா நாப்கினை வைத்து கழுத்துக்கு கீழே துடைத்துக் கொண்டிருந்தாள். "எனி ஹெல்ப்?" என்றதற்கு சிரித்தபடி "போடா..." என்றாள் 

"முக்கூடல் இன்னும் எவ்ளோ தூரம் தாத்தா??"

"நேரே போங்க.. ஒரு நாலு பர்லாங் இருக்கும். அவ்ளோதான்.."

கிளம்பும் வரை நுங்கு தாத்தா சிரித்துக் கொண்டே இருந்தார். சஞ்சனா சாப்பிட்ட அழகு அப்படி
.
.

(தொடரும்...)

3 comments:

  1. waiting for the next part ... dont make too much delay.. :))))))))))

    ReplyDelete
  2. உங்கள் கதையாக்கும் என்று நினைத்தேன்.. நல்ல நடை.. சீக்கிரம் அடுத்த அத்தியாயத்தைப் போட்டு விடுங்கள்.

    ReplyDelete